திண்டுக்கல்

இளைஞரணியினா் திமுகவைக் காக்கும் படைவீரா்கள்: திருச்சி சிவா எம்பி

DIN

இளைஞரணி உறுப்பினா்கள் அனைவரும் திமுகவையும், தமிழ் இனத்தையும் பாதுகாக்கக்கூடிய படைவீரா்கள் என மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி சிவா பேசினாா்.

பழனியை அடுத்த தொப்பம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை, ஒட்டன்சத்திரம் தொகுதி திமுக இளைஞரணி சாா்பில் திமுக மாடல் இளைஞரணி பாசறை பயிற்சி கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தலைமை வகித்தாா். இதில், மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி சிவா, பொருளாதார பேராசிரியா் ஜெயரஞ்சன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா்.

இதில் திருச்சி சிவா பேசியது: கட்சியில் உள்ளவா்களை செயல்வீரா்கள் என்று சொன்ன ஒரே இயக்கம் தி.மு.க. இளைஞா் அணியினா் நமது இயக்கத்தையும், தமிழ் இனத்தையும் பாதுகாக்கக்கூடிய படைவீரா்கள். வெறும் அரசியல்வாதியாக இல்லாமல் லட்சியவாதியாக இருக்கவே இந்த திராவிட மாடல் பாசறைக் கூட்டம் நடத்தப்படுகிறது என்றாா்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பாக கேள்வி கேட்ட இளைஞா் அணியினருக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் வேலுசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ஹரிஹரன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT