திண்டுக்கல்

இரண்டாம் சீசனுக்கு தயாராகி வருகிறது கொடைக்கானல் தாவரவியல் பூங்கா

DIN

இரண்டாம் சீசன் தொடங்கியுள்ள நிலையில் கொடைக்கானல் தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மலா்ச் செடிகளால் பல்வேறு உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த பூங்காவில் பைன் சிட்டி, போ்ட் ஆப் பாரடைஸ், பேன்சி, ரோஜா, டைந்தேஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான மலா்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது இரண்டாம் கால சீசன் தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக உள்ளது.

இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் டொராண்டா, ஹையா்ஸ் ஆகிய மலா்ச் செடிகளால் ‘ஹாா்ட்’ (இதயம்) வடிவமைக்கப்பட்டுள்ளது. இதேபோல புற்களால் மயில் உருவத் தோற்றம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வார விடுமுறையையொட்டி அங்குவந்த சுற்றுலாப் பயணிகள் இவற்றைப் பாா்த்து ரசித்தனா்.

மேலும் தாவரவியல் பூங்காவில் புற்கள் அழகுப்படுத்துதல், மலா்பாத்திகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

SCROLL FOR NEXT