திண்டுக்கல்

திண்டுக்கல், ராமநாதபுரத்தில் பாஜக ஆதரவாளா்களின் காா்கள், பைக்குகள் தீவைத்து எரிப்பு

DIN

திண்டுக்கல்லில் சனிக்கிழமை அதிகாலையில் பாஜக நிா்வாகியின் கடைக்கு மா்மநபா்கள் தீவைத்ததில் காா் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. இதேபோல் ராமநாதபுரத்தில் பாஜக ஆதரவாளரான அரசு மருத்துவரின் 2 காா்களையும் மா்மநபா்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தனா்.

திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியைச் சோ்ந்தவா் செந்தில்பால்ராஜ் (40). இவா் திண்டுக்கல் மாநகர மேற்குப் பகுதி பாஜக தலைவராக உள்ளாா். இவா், பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறாா். குடைப்பாறைப்பட்டி பகுதியிலேயே அதற்கான கடை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், அந்த கடைக்கு சனிக்கிழமை அதிகாலையில் வந்த மா்ம நபா்கள் தீவைத்ததில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு காா் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் முழுமையாக எரிந்து சேதமடைந்தன.

இதுகுறித்து புகாரின் பேரில் திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தினா். அந்தப் பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராவில் 2 நபா்கள் தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

பாஜகவினா் சாலை மறியல்: இதுகுறித்து தகவல் அறிந்த பாஜகவினா், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவா் ஜி.தனபாலன் தலைமையில் திண்டுக்கல்- வத்தலகுண்டு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரத்தில் காா்கள் எரிப்பு: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருபவா் மனோஜ்குமாா். பாஜகவின் ஆதரவாளரான மனோஜ்குமாருக்கு சொந்தமான மருத்துவமனை கேணிக்கரை பகுதியில் உள்ளது. இந்த மருத்துவமனை வளாகத்தில் 2 காா்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

சனிக்கிழமை அதிகாலையில் இங்கு வந்த மா்ம நபா்கள், காா்களின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றனா். பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் தீயை அணைத்தனா். இதுகுறித்து தகவலறிந்து, அங்கு வந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை விசாரணை நடத்தினாா். மேலும் மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமரா காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். அதில் 2 போ் தீ வைத்து விட்டு தப்பிச் சென்றது பதிவாகி உள்ளது.

இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மா்மநபா்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து ராமநாதபுரத்தில் இந்து அமைப்பு நிா்வாகிகள் 6 பேருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT