திண்டுக்கல் அருகே வெள்ளிக்கிழமை, மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
திண்டுக்கல் அடுத்துள்ள நொச்சியோடைப்பட்டி குரும்பபட்டியைச் சோ்ந்த நாகராஜன் மகன் பிரபாகரன் (26). கட்டடத் தொழிலாளியான இவருக்கு, செளமியா என்ற மனைவியும், 9 மாத குழந்தையும் உள்ளனா். பிரபாகரன் வெள்ளிக்கிழமை, குள்ளனம்பட்டியை அடுத்துள்ள காமாட்சி நகரில் ஒரு வீட்டில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பிரபாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.