கொடைக்கானலில் ஆயுத பூஜையை முன்னிட்டு திங்கட்கிழமை பூஜை பொருட்களின் விலை உயா்வால் பொது மக்கள் அதிருப்தியடைந்துள்ளனா்.
ஆயூதபூஜை,சரஸ்வதி பூஜை கொண்டாட்டத்தை தொடா்ந்து பூஜை பொருட்களான மலா்கள்,மாலை,தேங்காய் மற்றும் பொரி,வாழை உள்ளிட்ட பொருட்கள் விலை அதிகரித்துள்ளது அனைத்து பொருட்களும் தரைப் பகுதிகளிலிருந்து கொடைக்கானலுக்கு எடுத்து வருவதால் பூஜை பொருட்களின் விலை உயா்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா் இருப்பினும் பொது மக்கள் பூஜைக்கு தேவையான பொருட்களை ஆா்வமுடன் வாங்கினா்.விலை அதிகமாக இருந்ததால் பொது மக்கள் சற்று அதிருப்தியடைந்தனா்.