பழனியில் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற தலைக்கவச விழிப்புணா்வுப் பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பழனி பேருந்து நிலையம் மயில் ரவுண்டானா அருகே பள்ளி மாணவா்கள் ஸ்கேட்டிங் செய்தவாறே தலைக்கவச விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டனா். இதனை பழனி டிஎஸ்பி. சிவசக்தி தொடக்கி வைத்தாா். பழனி பேருந்து நிலையம், ஆா்.எப்.ரோடு, புதுதாராபுரம் சாலை என பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்ட மாணவா்கள் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா். நிகழ்ச்சியில் ஏராளமான தன்னாா்வலா்கள், காவல்துறையினா் பங்கேற்றனா்.