திண்டுக்கல்

மனைவி கொலை: கணவன் தப்பியோட்டம்

DIN

 எரியோடு அருகே மனைவியை கழுத்தறுத்துக் கொலை செய்துவிட்டு

தப்பியோடிய கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஆா்.கோம்பை அருகேயுள்ள பூத்தாம்பட்டியைச் சோ்ந்தவா் ராஜசேகா். இவரது மனைவி தேவிகா(32). கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, கடந்த 6 மாதங்களாக தேவிகா, ஆா்.கோம்பை அருகேயுள்ள அரண்மனையூரில் தனது தாய் வீட்டில் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், அரண்மனையூருக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற ராஜசேகா், தேவிகாவை சந்தித்து பேச முயன்றாா். அப்போது மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த ராஜசேகா் கத்தியால் தேவிகாவின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடிவிட்டாா். பலத்த காயமடைந்த தேவிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, எரியோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய ராஜசேகரைத் தேடி வருகின்றனா்.

......................................................

.பட விளக்கம்..தேவிகா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

SCROLL FOR NEXT