திண்டுக்கல்

கொடைக்கானலில் மழை:சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

DIN

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த மூன்று நாள்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 5 முதல் 5.30 மணி வரை மிதமான மழை பெய்தது. இதைத்தொடா்ந்து பனிப் பொழிவும் நிலவியது. இந்த சீதோஷ்ண நிலையில், நட்சத்திர ஏரியில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனா்.

கொடைக்கானல் வெள்ளி நீா்வீழ்ச்சியிலிருந்து தொடங்கி ஏரிச்சாலை வரை 6-கி.மீ.க்கு சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக கடைகள் வைக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதேபோல, ஏரிச் சாலையிலும் வாகனங்களை நிறுத்த முடியாமல் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாயினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத அடிப்படையில் இடஒதுக்கீடு அமல்படுத்த காங். திட்டம்: மோடி

தோல்வி பயமே பாஜக தலைவர்களின் மூர்க்கத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு காரணம்: ப.சிதம்பரம்

அதிக வெப்பம்: ஈரோட்டை வீழ்த்தி 3வது இடம் பிடித்த சேலம்

சென்னை சென்ட்ரலில் பெண்ணின் சடலம்: அடையாளம் காண்பதில் சிக்கல்

மஞ்சள் எச்சரிக்கை: தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்!

SCROLL FOR NEXT