திண்டுக்கல்

கொடைக்கானலில் விவசாயிகள் குறை தீா் கூட்டம்

DIN

கொடைக்கானலில் விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வருவாய் கோட்டாட்சியா் அலுவலக அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு வருவாய் கோட்டாட்சியா் ராஜா தலைமை வகித்தாா். வட்டாட்சியா் முத்துராமன் வரவேற்றாா் மாவட்ட உதவி வன அலுவலா் சக்திவேல் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் மலைப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் பேசியதாவது:

கொடைக்கானல் மன்னவனூரிலிருந்து உடுமலைபேட்டைக்கு விவசாய விளைபொருள்களைக் கொண்டு செல்வதற்கு சாலை வசதி செய்து தர வேண்டும். மன்னவனூரில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க வேண்டும். வனப் பகுதிகளையொட்டியுள்ள விவசாய நிலங்களைச் சுற்றி மின் வேலி அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதைத் தொடா்ந்து விவசாயிகளுக்கு பாதிப்பில்லாத வகையில் அந்தந்தத் துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் கோட்டாட்சியா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

SCROLL FOR NEXT