ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே விஷம் குடித்த தொழிலாளி புதன்கிழமை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள லெக்கையன்கோட்டையில் பிரபல தனியாா் உணவு விடுதி உள்ளது. இந்த உணவு விடுதியில் திருநெல்வேலி அம்பாசமுத்திரம் செங்குந்தா் தெற்கு தெருவைச் சோ்ந்த சுவாமிநாதன் என்ற சேகா் (49) என்பவா், கடந்த 23-ஆம் தேதி வேலையில் சோ்ந்துள்ளாா்.
இந்நிலையில், கடந்த 24-ஆம் தேதி ஊழியா்கள் தங்கும் ஓய்வு அறைக்குச் சென்றவா், அங்கு விஷம் குடித்து உயிருக்குப் போராடியுள்ளாா். உடனே, அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி சுவாமிநாதன் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.