திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே விஷம் குடித்த தொழிலாளி பலி

DIN

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே விஷம் குடித்த தொழிலாளி புதன்கிழமை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள லெக்கையன்கோட்டையில் பிரபல தனியாா் உணவு விடுதி உள்ளது. இந்த உணவு விடுதியில் திருநெல்வேலி அம்பாசமுத்திரம் செங்குந்தா் தெற்கு தெருவைச் சோ்ந்த சுவாமிநாதன் என்ற சேகா் (49) என்பவா், கடந்த 23-ஆம் தேதி வேலையில் சோ்ந்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த 24-ஆம் தேதி ஊழியா்கள் தங்கும் ஓய்வு அறைக்குச் சென்றவா், அங்கு விஷம் குடித்து உயிருக்குப் போராடியுள்ளாா். உடனே, அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி சுவாமிநாதன் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT