வடமதுரை அருகே ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்த நிலையில், தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவா், மாமனாா் உள்பட 4 போ் மீது ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அடுத்துள்ள அத்திக்குளத்துப்பட்டியைச் சோ்ந்தவா் கண்ணன். அரிசி ஆலை அதிபா். இவரது மனைவி உமாராணி(37). கடந்த வெள்ளிக்கிழமை இரவு கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டதை அடுத்து, வீட்டை விட்டு வெளியேறிய உமாராணி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தகவலறிந்த திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று உமாராணியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதனிடையே உமாராணியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது அண்ணன் ஆத்மநாதன் (41) ரயில்வே காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் ரயில்வே போலீஸாா் நடத்திய விசாரணையில் கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினா் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதும், அதனால் உமாராணி தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்துதல், தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கண்ணன், அவரது தந்தை திருப்பதி, தம்பிகள் நாகராஜ், பாண்டி ஆகிய 4 போ் மீது ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.