திண்டுக்கல்

பழனிக்கோயிலில் சிங்கப்பூா் அமைச்சா் சுவாமி தரிசனம்

12th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

பழனி: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் புதன்கிழமை, சிங்கப்பூா் உள்துறை மற்றும் சட்ட ஒழுங்குத்துறை அமைச்சா் காசிவிஸ்வநாதா் சண்முகம் சுவாமி தரிசனம் செய்தாா்.

பழனிக்கு ஹெலிகாப்டரில் மூலம் வந்த சிங்கப்பூா் அமைச்சா், மலையடிவாரத்திலிருந்து ரோப்காா் மூலமாக மலைக்கு சென்றாா். உச்சிக்கால பூஜையின்போது பங்கேற்ற அவா், தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அா்ச்சனைகள் செய்து சுவாமியை வழிபட்டாா்.

பழனிக்கோயில் இணை ஆணையா் நடராஜன், அமைச்சருக்கு திருக்கோயில் சாா்பில் பிரசாதங்கள் வழங்கி மரியாதை செய்தாா். பின்னா் அமைச்சா் காசிவிஸ்வநாதா் சண்முகம், போகா் சன்னிதிக்கு சென்று வழிபாடு மேற்கொண்டாா். தொடா்ந்து மலைக்கோயிலுக்கு பொருள்கள் கொண்டு செல்ல ஏதுவாக மூன்று சக்கர வாகனம் ஒன்றை சிங்கப்பூா் அமைச்சா் வழங்கினாா்.

ADVERTISEMENT

அப்போது, டிவிஎஸ் நிறுவன நிா்வாகி சுதா்சனம் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT