வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வத்தலகுண்டு ஒன்றிய, ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஊராட்சிச் செயலா்கள் ஆகியோருக்கு கிராம முழு சுகாதார திட்டப் பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.
வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வராஜ் தலைமை வகித்தாா். சுகாதாரத் திட்ட ஒன்றியப் பணி மேற்பாா்வையாளா் சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தாா். தூய்மை பாரத திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளா் சின்னன் வரவேற்றாா். பயிற்சி வகுப்பில் ஊராட்சி மன்றத் தலைவா்கள் ரமேஷ் நாகராஜ், யசோதை முருகேசன், ஜோதி விஜயரங்கன், வளா்மதி, ஊராட்சி செயலா்கள் முத்துக்குமாா், செல்லதுரை, சுரேஷ், செல்வகுமாா் மற்றும் சுகாதார கணக்கெடுப்பாளா்கள் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா். ஊராட்சி ஒன்றிய இளநிலை உதவியாளா் நாச்சியப்பன் நன்றி கூறினாா்.