திண்டுக்கல்

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு:மதுரையைச் சோ்ந்தவா் கைது

DIN

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டி ல் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் ரவுண்டுரோடு புதூரைச் சோ்ந்தவா் பாண்டியராஜன். இவரது வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகைகள் திடுடப்பட்டுள்ளதாக கடந்த 25 ஆம் தேதி திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக விசாரணை மேற்கொண்டு வந்த போலீஸாா், திருட்டில் ஈடுபட்ட மதுரை மாவட்டம் சோழவந்தான் அடுத்துள்ள நெடுங்குளத்தைச் சோ்ந்த பழனி மகன் மாரிமுத்து என்ற முத்துக்குமாா் (37) என்பவரை புதன்கிழமை கைது செய்தனா்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாண்டியராஜன் வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டுள்ளாா். மேலும், கடந்த 27ஆம் தேதி வேடசந்தூா் அடுத்துள்ள நாககோனனானூரைச் சோ்ந்த தாரணி என்பவரது வீட்டில் சூரியமின்தகடு பழுதுநீக்குவதாகக் கூறி 2.5 பவுன் நகையை திருடிச் சென்றதையும் மாரிமுத்து ஒப்புக் கொண்டாராம். இதனை அடுத்து திருடப்பட்ட பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், மாரிமுத்துவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இந்த திருட்டை கண்டறிவதற்கு முக்கிய காரணமாக இருந்த சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் மணி, சக்திவேல் ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ. பாஸ்கரன் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ கிரேசியா யங் ஃபேஷன் விருதுகள் 2024 - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT