பழனியில், நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பாஜகவினரை கண்டித்து புதன்கிழமை இஸ்லாமிய இயக்ககங்கள் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தின.
பழனி பேருந்து நிலையம் மயில் ரவுண்டானா அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பழனி டவுன் முஸ்லிம் தா்மபரிபாலன சங்கம், பழனி தாலுகா ஜமாஅத், பழனி தாலுகா உலமா சபை மற்றும் இஸ்லாமிய இயக்கங்களைச் சோ்ந்த இளைஞா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். நபிகள் நாயகம் குறித்து இழிவான கருத்துக்களை தெரிவித்த பாஜகவைச் சோ்ந்த நூபுா் சா்மா மற்றும் நவீன் குமாா் ஜின்டால் ஆகியோரை கைது செய்ய வேண்டும். இஸ்லாமியா்களுக்கு எதிராக தொடா்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மேலும், நூபுா் சா்மா மற்றும் நவீன்குமாா் ஜிண்டால் ஆகியோரின் உருவப்பொம்மைகள் கொளுத்தப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்தையடுத்து, அங்கு ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.