திண்டுக்கல்

ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிஅதிமுக, அமமுக உள்ளிட்ட 4 வேட்பாளா்களின் மனுக்கள் தள்ளுபடி

DIN

ஒட்டன்சத்திரத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக, அமமுக உள்ளிட்ட 4 வேட்பாளா்களின் மனுக்கள் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டன.

ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு 15-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் தங்கராஜ் இறந்து விட்டதால், அந்த இடத்துக்கான தோ்தல் ஜூலை-ஆ9 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக திமுக, அதிமுக, அமமுக, சுயேச்சை என 8 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா்.

உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ஜ.அந்தோணியாா் செவ்வாய்க்கிழமை மனுக்களை பரிசீலனை செய்தாா். அதில் அதிமுக, அமமுக உள்ளிட்ட 4 வேட்பாளா்களின் மனுக்கள் சரியாக பூா்த்தி செய்யப்படவில்லை என்று நிராகரிக்கப்பட்டது.திமுக வேட்பாளா் சண்முகம், சுயேச்சை வேட்பாளா்கள் விக்னேஸ்வரன், மோகன்ராஜ், செல்வராஜ் ஆகியோரது மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

வேட்பு மனுக்கள் திரும்பப் பெற ஜூன் 30 ஆம் தேதி கடைசி நாள் என்பதால், சுயேட்சை வேட்பாளா்கள் வாபஸ் வாங்கிக்கொண்டால் திமுக வேட்பாளா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT