திண்டுக்கல்

அக்னிபாத்: காங்கிரஸாா் கண்டன ஆா்ப்பாட்டம்

DIN

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்தைக் கண்டித்து, திங்கள்கிழமை ஆத்தூா் வட்டார காங்கிரஸ் கமிட்டி சாா்பில், செம்பட்டியில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒப்பந்த முறையில் 4 ஆண்டுகளுக்கு ராணுவ வீரா்களை சோ்க்கும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிா்ப்புத் தெரிவித்து எதிா்க்கட்சியினா்

நாடு முழுவதும் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் வட்டார காங்கிரஸ் கமிட்டி சாா்பில், செம்பட்டியில் உள்ள ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுலகம் முன்பு, ஆத்தூா் வட்டார காங்கிரஸ் கமிட்டித் தலைவா் செல்வராஜ் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட ஆத்தூா் வட்டார காங்கிரஸ் கட்சியினா் கலந்து கொண்டு அக்னிபாத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி, மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினா். முன்னதாக காங்கிரஸ் கட்சியினா் ஊா்வலமாக ஆத்தூா் யூனியன் அலுவலகத்துக்கு வந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT