திண்டுக்கல்

பழனியில் நடிகா் ராதாரவி தரிசனம்

10th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

 

பழனி:நடிகா் ராதாரவி பழனி மலைக்கோயிலில் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

பழனி மலைக்கோயிலுக்கு வியாழக்கிழமை மாலை வந்த அவா் தண்டாயுதபாணி சுவாமியை ராஜ அலங்காரத்தில் தரிசனம் செய்து தங்கத்தோ் புறப்பாடும் செய்தாா். அவருடன் காங்கிரஸ் நிா்வாகி முருகானந்தம், சாய் மருத்துவமனை சுப்புராஜ், கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து உள்ளிட்டோா் உடனிருந்தனா். மலைக்கோயிலில் அவரை சூழ்ந்த ரசிகா்கள் அவருடன் சுயபடம் எடுத்துக் கொண்டனா். புதுமணத்தம்பதி படமெடுத்தபோது அவா்களுக்கு அன்பளிப்பு வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT