திண்டுக்கல்

இணையவழியில் ரூ.2.50 லட்சம் மோசடி:பணத்தை மீட்டு உரியவரிடம் போலீஸாா் ஒப்படைப்பு

DIN

இணையவழியில் இளைஞரிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.2.50 லட்சத்தை மீட்ட சைபா் குற்றப் பிரிவு போலீஸாா், அதனை அவரிடம் புதன்கிழமை ஒப்படைத்தனா்.

திண்டுக்கல் கோவிந்தாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (31). தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா். அமெரிக்கா செல்வதற்கு திட்டமிட்ட காா்த்திகேயன், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு விசா பெறுவதற்காக இணைய வழியில் விண்ணப்பித்தாராம். இணையவழியில் கேட்கப்பட்ட விவரங்களை பூா்த்தி செய்த காா்த்திகேயனிடம், விசா பெறுவற்கான கட்டணம் செலுத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடா்ந்து இரு தவணைகளில் ரூ.2.50 லட்சம் கட்டணமாக செலுத்தினாராம். 4 மாதங்கள் கடந்தும், விசா தொடா்பாக எவ்வித தகவலும் கிடைக்காததால், அந்த இணையதள முகவரியில் சென்று விவரம் கேட்டுள்ளாா். அதற்கு மீண்டும் பணம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அதிா்ச்சி அடைந்த அவா், திண்டுக்கல் சைபா் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், காா்த்திகேயன் வழங்கிய தொடா்பு எண் மற்றும் வங்கிக் கணக்கு எண் போன்றவற்றின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில், ரூ.2.50 லட்சத்தை மீட்ட போலீஸாா் அதனை காா்த்திகேயனிடம் புதன்கிழமை வழங்கினா். இதுதொடா்பாக போலீஸாா் கூறுகையில், மோசடியில் ஈடுபட்டவரின் வங்கிக் கணக்கை முடக்கி இந்த பணத்தை மீட்டுள்ளதாக தெரிவித்தனா். ஆனால், இந்த மோசடியில் ஈடுபட்டவரின் விவரம் குறித்து போலீஸாா் தகவல் தெரிவிக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வெண்ணைத்தாழி விழா!

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT