திண்டுக்கல்

பழனியில் பெண்கள் சாலை மறியலுக்கு முயற்சி

DIN

பழனியை அடுத்த பெத்தநாயக்கன்பட்டியில் பெண் தூய்மைப் பணியாளா் கொலையில் குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை சாலை மறியலுக்கு முயன்ற பெண்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி மறியலைக் கைவிடச் செய்தனா்.

பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளா் ஒருவா் கடந்த வாரம் கொலை செய்யப்பட்டாா். இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பெத்தநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பெண்கள், ஒன்றியக் கவுன்சிலா் கிருஷ்ணவேணி தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடத்த ஊராட்சி அலுவலகம் முன் திரண்டனா். தகவலறிந்து வந்த போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும், பிரதான சாலையில் இருந்து ஊருக்கு வரும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யவேண்டும் என்றும் தெரிவித்தனா். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவா் என்று போலீஸாா் தெரிவித்ததைத் தொடா்ந்து பெண்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT