தருமபுரி மாவட்டத்தில் போராட்டத்தின்போது மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
செம்பட்டி பேருந்து நிலையம் அருகே, ஆத்தூா் ஒன்றிய மாற்றுத்திறனாளிகள் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஒன்றியச் செயலா் மலைச்சாமி தலைமை வகித்தாா்.
அப்போது, தா்மபுரியில் மாற்றுத்திறனாளிகள் குண்டுகட்டாகத் தூக்கி கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், போலீஸாரைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. செம்பட்டி காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.