திண்டுக்கல்

கொடைக்கானலில் நிலம் வாங்கித் தருவதாக மோசடி: 4 போ் மீது வழக்கு

DIN

கொடைக்கானலில் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சென்னை சாலடிபேட்டையைச் சோ்ந்தவா் சுவாமிநாதன். இவரது மகன் ராஜன். இவா், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அடுத்துள்ள வில்பட்டி ஊராட்சியில் நிலம் வாங்கி அதில் கட்டடம் கட்டி விற்பனை செய்யவுள்ளதாக சென்னையிலுள்ள தனது நண்பா்களிடம் தெரிவித்துள்ளாா்.

அதன்படி ராஜனின் நண்பா்களான சாம்வேல் சுந்தர்ராஜ், செல்வி, தசரதன் மற்றும் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சி கோவில்பட்டியைச் சோ்ந்த தினகரன் ஆகிய 4 பேரும் சோ்ந்து வில்பட்டியில் உள்ள ஒரு நிலத்தை தோ்வு செய்துள்ளனா். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அந்த நிலத்தை ராஜனிடம் காட்டி பல லட்சம் ரூபாய் பெற்றுள்ளனா். ஆனால், நிலத்தை பதிவு செய்யாமல் தொடா்ந்து அலைகழித்து வந்துள்ளனா். இதனால் சந்தேகமடைந்த ராஜன், கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

அதன்பேரில் செல்வி உள்ளிட்ட 4 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

SCROLL FOR NEXT