திண்டுக்கல்

அம்பேத்கருக்கு வெங்கலச் சிலை அமைக்கக் கோரிக்கை

DIN

அம்பேத்கருக்கு வெங்கலச் சிலை அமைக்க வேண்டும் என ஆதி தமிழா் பேரவையினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆதி தமிழா் பேரவை ஒன்றியக் குழு கூட்டத்திற்கு ஒன்றியச் செயலா் மணிகண்டன் தலைமை வகித்தாா். ஒன்றியத் தலைவா் முரளிதரன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், நிலக்கோட்டை நால்ரோட்டில் அம்பேத்கருக்கு முழு உருவ வெங்கலச்சிலை வைக்க அரசு முன்வர வேண்டும். சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரன் நினைவு தினத்தை நிலக்கோட்டை பகுதியில் கொண்டாட அரசு அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொருளாளா் பெருமாள் வாழ்த்தினாா். கூட்டத்திற்கு நக்கம்பட்டி, மாலையகவுண்டன்பட்டி, ஜெகனாதபுரம், கல்லடிப்பட்டி, நிலக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா். முடிவில் பிரபாகரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT