திண்டுக்கல்

பழனியில் ரூ. 5 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

DIN

பழனியில் ரூ.5 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பழனி காந்திரோடு தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கோட்டாட்சியா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் சசிக்குமாா் வரவேற்றாா்.

பழனி சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி. செந்தில்குமாா், திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் வேலுச்சாமி உள்ளிட்டோா் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

சமூக நலத்துறை மற்றும் மகளிா் உரிமை துறை சாா்பில் நடைபெற்ற விழாவில் 384 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் மூலம் ஒரு கிராம் தங்கக்காசு மற்றும் ரொக்கப் பணம், முதல்வா் விபத்து நிவாரண நிதியிலிருந்து 32 பேருக்கு நிவாரணத் தொகை, 76 பேருக்கு முதியோா் உதவித்தொகை வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பழனி ஒன்றியக்குழுத் தலைவா் ஈஸ்வரி கருப்புச்சாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT