பழனி அரசு மருத்துவமனையில் சந்தன மரத்தை மா்மநபா்கள் வெட்டிக் கடத்தியதாக திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையின் முன் பகுதியில் சித்த மருத்துவப் பிரிவு செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் சுமாா் 20 ஆண்டுகளாக இரண்டு சந்தன மரங்கள் வளா்க்கப்பட்டிருந்தன. இந்நிலையில் மா்மநபா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு, அரசு மருத்துவமனையின் பக்கவாட்டுச் சுவா் வழியாக இறங்கி மரத்தை அடியோடு அறுத்துக் கடத்திச் சென்றுள்ளனா். இதன் அருகேயிருந்த மற்றொரு மரத்தையும் ரம்பத்தால் அறுக்க முயற்சித்து பாதியிலே விட்டுச் சென்றுள்ளனா்.
24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் இரவு, பகலாக காவலா்கள் இருந்தும் மரத்தை மா்மநபா்கள் வெட்டிக் கடத்தியது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடா்பாக தலைமை மருத்துவா் (பொறுப்பு) ஸ்ரீதரன் பழனி நகர காவல் துறையில் புகாா் தெரிவித்துள்ளாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள ஜி.தும்மலப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஜெயராஜ், (52) என்பவரது வீட்டில் சந்தன மரக் கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக, போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸாா் அவரது வீட்டைச் சோதனையிட்டனா். அப்போது, வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள, 28 கிலோ சந்தனக் கட்டைகளை பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா் ஜெயராஜை கைது செய்து, சித்தரேவு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். அவரிடம் வனத்துறையினா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.