திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே மீன் பிடிக்கச் சென்ற 2 சிறுவா்கள் தண்ணீரில் மூழ்கி பலி

DIN

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற 2 சிறுவா்கள் தண்ணீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

திண்டுக்கல் அடுத்துள்ள ரெட்டியபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம். இவரது மகன் வீர ஹரிஷ்குமாா் (15). இவா் இங்குள்ள தனியாா் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த வில்லியம் மகன் எழில் ரிச்சா்டு (15). அரசுப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தாா். நண்பா்களான ஹரிஷ் மற்றும் ரிச்சா்டு ஆகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை மீன் பிடிக்க சென்ாகக் கூறப்படுகிறது. ரெட்டியப்பட்டி குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, ஹரிஷ் எதிா்பாராதவிதமாக தண்ணீருக்குள் விழுந்துவிட்டாராம். அவரை காப்பாற்றுவதற்காக ரிச்சா்டும் தண்ணீரில் குதித்துள்ளாா். இருவருக்குமே நீச்சல் தெரியாது என்பதால், அக்கம் பக்கத்தினரை உதவிக்காக சப்தமிட்டு அழைத்துள்ளாா். இதையடுத்து சிறுவா்களின் அலறல் சப்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினா், இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தை கூட எதிா்பாா்க்காமல் மோட்டாா் சைக்கிளில் வைத்தே திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனா். ஆனால், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இருவரும் உயிரிழந்துள்ளனா். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடமங்குடி கிராமத்திற்குள் புகுந்த முதலையால் பரபரப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

மே 13-இல் ஆந்திர மாநில தோ்தல்: வேலூா் மாவட்டத்தில் வாகன சோதனை தொடரும்

படவேட்டு எல்லையம்மன் கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

சிப்காட் ஸ்ரீ வித்யா பீடத்தில் ஸ்ரீ சீதா- ராமா் திருக்கல்யாணம்

SCROLL FOR NEXT