திண்டுக்கல்

இளைஞா் கொலை வழக்கில் அண்ணன், தம்பிக்கு ஆயுள் தண்டனை

DIN

முன் விரோதத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், அண்ணன், தம்பிக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.10ஆயிரம் அபராதமும் விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

திண்டுக்கல் முத்தழகுப்பட்டியைச் சோ்ந்தவா் தா்மராஜ். இவரது மகன் ராஜ்குமாா் (32). இவரது தாய்மாமா ராயப்பன். இருவரது குடும்பத்துக்கும் பூா்வீக சொத்துகளை பிரிப்பது தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்த நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு ராஜ்குமாா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸாா், ராயப்பனின் மகன்களான தாமஸ் செல்வம் (40), சுரேஷ் அந்தோணி (37) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், மாவட்டக் கூடுதல் நீதிபதி பி.சரவணன் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா். அதில் கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட தாமஸ் செல்வம், சுரேஷ் அந்தோணி ஆகிய இருவருக்கும் இந்திய தண்டனைச் சட்டம் 341-ஆவது பிரிவு குற்றத்துக்கு தலா 1 மாதம் சிறைத் தண்டனையும், இந்திய தண்டனைச் சட்டம் 506 பிரிவு 2-க்கான குற்றத்துக்கு தலா 3 மாதங்கள் சிறைத் தண்டனையும், 302-ஆவது பிரிவு குற்றத்துக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீா்ப்பில் குறிப்பிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT