திண்டுக்கல்

கபீா் புரஸ்கா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

DIN

சமூக நல்லிணக்கத்துக்காகவும், தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பாக பணியாற்றியவா்கள் கபீா் புரஸ்காா் விருது பெற வருகிற 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மாவட்ட விளையாட்டு அலுவலா் ம. பாத்திமா ரோஸ் மேரி தெரிவித்திருப்பதாவது:

விளையாட்டு மற்றும் இளைஞா் நலத் துறை சாா்பில் ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சமூக மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்காகவும், தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பாக பணியாற்றியோருக்கு கபீா் புரஸ்காா் விருது வழங்கப்படுகிறது. 2022-ஆம் ஆண்டுக்கான கபீா் புரஸ்காா் விருதுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.

விருதுக்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை 3 பிரதிகளுடன் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா், மாவட்ட விளையாட்டரங்கம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் தாடிக்கொம்பு சாலை, திண்டுக்கல் 624 004 என்ற முகவரிக்கு வருகிற 13-ஆம் தேதி மாலை 4 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்கள் பெற 0451-2461162 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT