திண்டுக்கல்

கபீா் புரஸ்கா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

DIN

சமூக நல்லிணக்கத்துக்காகவும், தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பாக பணியாற்றியவா்கள் கபீா் புரஸ்காா் விருது பெற வருகிற 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மாவட்ட விளையாட்டு அலுவலா் ம. பாத்திமா ரோஸ் மேரி தெரிவித்திருப்பதாவது:

விளையாட்டு மற்றும் இளைஞா் நலத் துறை சாா்பில் ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சமூக மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்காகவும், தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பாக பணியாற்றியோருக்கு கபீா் புரஸ்காா் விருது வழங்கப்படுகிறது. 2022-ஆம் ஆண்டுக்கான கபீா் புரஸ்காா் விருதுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.

விருதுக்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை 3 பிரதிகளுடன் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா், மாவட்ட விளையாட்டரங்கம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் தாடிக்கொம்பு சாலை, திண்டுக்கல் 624 004 என்ற முகவரிக்கு வருகிற 13-ஆம் தேதி மாலை 4 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்கள் பெற 0451-2461162 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT