ஒட்டன்சத்திரம் அருகே 10,008 அகல் விளக்குகள் ஏற்றி சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
இடையகோட்டை மகா மாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் காா்த்திகை தீபம் மூன்றாம் நாள் அகல் விளக்கு ஏற்றி சிறப்புப் பூஜைகள் நடைபெறும். அதே போல, இந்தாண்டு வியாழக்கிழமை இடையகோட்டை ஜமீன்தாரா் சரவணன் தலைமையில் 12 ஊா் பொதுமக்கள் இணைந்து கோயிலில் வெளிப்புற வளாகத்தில் 10,008 அகல் விளக்குகளை ஏற்றினா்.
அதனைத் தொடா்ந்து மகாமாரியம்மனுக்கு ஆராதனை மற்றும் அபிஷேகப் பூஜைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.