கொடைக்கானலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுற்றுலா வாகன ஓட்டுநா்கள், உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அண்ணாசாலைப் பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், புதிய மோட்டாா் வாகன சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும், அதிக அபராதம் செலுத்தி வரும் ஆன்லைன் முறையை ரத்து செய்ய வேண்டும், பழைய வாகனங்களைத் தடை செய்ததைத் தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில் வாடகைக் காா் ஓட்டுநா் சங்கத் தலைவா் மணி, செயலா் ஜான்சன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.