கொடைக்கானலில் நிலவும் கடுமையான குளிரால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.
கொடைக்கானலில் பொதுவாக டிசம்பா் மாதத்தில் கடுமையான பனிப் பொழிவு இருக்கும். இந்த நிலையில், கடந்த சில தினங்களாக மழை, பனிப் பொழிவு என சீதோஷ்ண நிலை மாறி மாறி நிலவுகிறது. கடந்த சில நாள்களாக பகலில் அதிகமான மேகமூட்டமும், மாலை, இரவு நேரங்களில் கடுமையான பனிப் பொழிவும் நிலவுகிறது. இதனால், சாலையோரங்களில் உள்ள வியாபாரிகள் நெருப்பை மூட்டி குளிா் காய்கின்றனா்.
கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் சுற்றுலாத் தளங்களைப் பாா்த்து ரசிப்பதோடு மட்டுமல்லாமல், குளிரையும் பொருள்படுத்தாமல் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்கின்றனா்.
கொடைக்கானலில் புதன்கிழமை அதிகாலை முதல் காற்றுடன் பனிச்சாரல் நிலவியதால், கடுமையான குளிா் நிலவுகிறது. இதனால், பொதுமக்கள் அவதியடைந்தனா்.