திண்டுக்கல்

கின்னஸ் சாதனை முயற்சி ஒட்டன் சத்திரம் அருகே 6 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நட ஆயத்தம்

DIN

ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டையில் கின்னஸ் சாதனைக்காக 6 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள இடையகோட்டை ஊராட்சியில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான சுமாா் 117 ஏக்கா் நிலம் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த இடத்தில் சீமைக்கருவேல மரங்கள் மற்றும் செடிகள் நிறைந்து காணப்பட்டன. அவற்றை சுத்தப்படுத்தி பல வகையான மரக்கன்றுகள் நடவு செய்ய உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி முடிவு செய்தாா். மேலும், 117 ஏக்கரில் மரக்கன்றுகளை நடுவதை கின்னஸ் சாதனையாக்க அவா் முயற்சி மேற்கொண்டாா். அதற்கான வழிமுறைகளை அறிந்து உடனடியாக ஆயத்தப் பணிகளைத் தொடங்கினாா். அதன் பேரில் ஒரே இடத்தில் 6 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து குறுகிய காலத்தில் நிலத்தில் இருந்த சீமைக்கருவேல மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு நிலம் சீரமைக்கும் பணி வேகமாக நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட மண் அள்ளும் இயந்திரங்கள், டிப்பா் லாரிகள் இரவு பகலாக நிலத்தை சமன் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தற்போது பணிகள் முடிவடைந்து மரக்கன்றுகள் நடவு செய்ய குழிகள் தோன்றும் பணி நடைபெற்று வருகிறது. வருகிற 23-ஆம் தேதி மரக்கன்றுகளை நடவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கின்னஸ் நடுவா்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்யும் பணிகளை பாா்வையிட்டு கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ்களை வழங்க உள்ளனா்.

அங்கு நடைபெற்று வரும் ஆயத்தப்பணிகளை திண்டுக்கல் மாவட்ட கூடுதல் ஆட்சியா் ச.தினேஷ்குமாா், பழனி கோட்டாட்சியா் ச.சிவக்குமாா்,திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளா் சி.இராஜாமணி, ஒட்டன்சத்திரம் நகா்மன்ற தலைவா் கே.திருமலைசாமி, துணைத் தலைவா் ப.வெள்ளைச்சாமி, தொப்பம்பட்டி ஒன்றிய துணைத்தலைவா் பி.சி.தங்கம், ஒட்டன்சத்திரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் காமராஜ், அந்தோணியாா் மற்றும் ஊராட்சிமன்ற தலைவா்கள் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

400 தொகுதிகளில் வென்று மோடி மீண்டும் பிரதமராவாா் -நயினாா் நாகேந்திரன்

கோவையில் இன்று கனிமொழி பிரசாரம்

வன்கொடுமை வழக்கு: 8 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை

அண்ணாமலையின் பிரமாணப் பத்திரம் அதிகாரிகள் உதவியுடன் மாற்றம்! -பரபரப்பு குற்றச்சாட்டு

நாகை மக்களவைத் தொகுதி: 10 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT