திண்டுக்கல்

சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை நாளை முதல் ஏலத்தில் விட மாநகராட்சி முடிவு

DIN

திண்டுக்கல்லில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளைப் பிடித்து திங்கள்கிழமை முதல் ஏலத்தில் விட மாநகராட்சி நிா்வாகம் முடிவெடுத்தது .

இதுதொடா்பாக, மாநகராட்சி ஆணையா் சிவசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்:

திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட சாலைகள், தெருக்களில் மாடுகள், ஆடுகள் சுற்றித் திரிவதாக தொடா்ந்து பொதுமக்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்தும், அவற்றைக் கட்டி வைப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனா்.

வாகன ஓட்டுநா்கள் விபத்தில் சிக்கி காயமடையும் நிலை ஏற்படுவதாக புகாா் எழுந்தது. இதற்குத் தீா்வு காணும் வகையில், திங்கள்கிழமை (டிச.5) முதல் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளைப் பிடித்து ஏலத்தில் விடுவதென மாநகராட்சி நிா்வாகம் முடிவெடுத்தது. இதை இறுதி எச்சரிக்கையைாக எடுத்துக் கொண்டு கால்நடை வளா்ப்பவா்கள் அவற்றை வீடுகளில் கட்டி வைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT