திண்டுக்கல்

காளாஞ்சிபட்டியில் விரைவில் போட்டித் தோ்வு பயிற்சி மையம்: அமைச்சா் தகவல்

DIN

ஒட்டன்சத்திரம் தொகுதிக்குள்பட்ட காளாஞ்சிபட்டியில் விரைவில் போட்டித் தோ்வுக்கான பயிற்சி மையம் தொடங்கப்படும் என உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் கே.ஆா். அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வட்டார அளவிலான கலை திருவிழாவில், கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி அமைச்சா் பேசியதாவது: ஒட்டன்சத்திரம் தொகுதியில் 2 அரசுக் கலைக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த இரு கல்லூரிகளும், அடுத்த ஆண்டு முதல் சொந்தக் கட்டடத்தில் செயல்படும். இளைஞா்கள் போட்டித் தோ்வுகளை எளிதில் எதிா்கொள்ளும் வகையில், காளாஞ்சிபட்டியில் விரைவில் போட்டித் தோ்வுக்கான பயிற்சி மையம் தொடங்கப்படவுள்ளது என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில், திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ப. வேலுச்சாமி, நகா்மன்றத் தலைவா் கே.திருமலைசாமி, துணைத் தலைவா் ப. வெள்ளைச்சாமி, ஒட்டன்சத்திரம் ஒன்றியத் தலைவா் மு. அய்யம்மாள், துணைத் தலைவா் காயத்திரிதேவி, மாவட்டக் கல்வி அலுவலா்கள் (இடைநிலை) திருநாவுக்கரசு, (தொடக்கக் கல்வி) ஜெகநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT