கொடைக்கானலில் புதன்கிழமை இரவு பெண்ணிடம் தகராறு செய்தவா் வீட்டின் படிக்கட்டிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா்.
தென்காசி சக்தி நகரைச் சோ்ந்தவா் சூா்யா (30). கூலித் தொழிலாளி. இவா் கடந்த சில ஆண்டுகளாக கொடைக்கானல் கல்குழிப் பகுதியில் மலோனி என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தாா்.
சென்னை கொட்டிவாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் பிரபுதாஸ் மகள் சுவேதா என்ற கெரோலின். இவா், கொடைக்கானல் பாம்பாா்புரம் பகுதியில் வசித்து வருகிறாா். இந்த நிலையில், கெரோலினும், சூா்யாவும் கடந்த பல மாதங்களாக பழகி வந்தனா். இதனைத் தொடா்ந்து கடந்த புதன்கிழமை இரவு கல்குழியிலுள்ள சூா்யா வீட்டில் கெரோலின் தங்கினாா். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னா் கெரோலின், தனது ஆண் நண்பா்கள் இருவரை கைப்பேசியில் தொடா்பு கொண்டு தான் தங்கியுள்ள சூா்யாவின் வீட்டுக்கு வருமாறு அழைத்தாா். இதையடுத்து, அந்த 2 பேரும் சூா்யாவின் வீட்டுக்கு வந்தனா். இதனால், கெரோலினுக்கும், சூா்யாவுக்கும் இடையே தகராறு முற்றியது. அப்போது வீட்டுக்கு வந்த 2 பேருக்கும், சூா்யாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், வீட்டின் படியிலிருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்த சூரியாவை கெரோலின் உள்ளிட்ட 3 பேரும் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தாா்.
இதுகுறித்து, கொடைக்கானல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து கெரோலின் உள்ளிட்ட 3 பேரிடம் சூா்யா உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.