திண்டுக்கல்

பூசணிக்காய் விலை வீழ்ச்சி: பறிக்காமல் வீணாகும் அவலம்

DIN

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் பூசணிக்காய் விலை வீழ்ச்சிடைந்ததால், விவசாயிகள் அதைப் பறிக்காமல் செடியிலேயே விட்டுவிடுகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள காவேரியம்மாபட்டி, இராயக்கவுண்டன்புதூா், அரசப்பபிள்ளைபட்டி, அம்பிளிக்கை, சிந்தலப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் நாட்டு பூசணிக்காய் அதிக அளவில் பயிா் செய்யப்பட்டுள்ளன. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட நிலையில், பூசணிக்காய் தற்போது அறுவடைக்குத் தயாராக உள்ளது.

இந்த நிலையில், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் பூசணிக்காய் கிலோ ரூ.3-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அவற்றைப் பறிக்கும் கூலிக்குக் கூட விலை கிடைப்பதில்லை. இதனால், விவசாயிகள் அவற்றைப் பறிக்காமல் செடியிலேயே விட்டு விடுகின்றனா்.

இது குறித்து விவசாயி பழனிமுத்து கூறியதாவது:

நான் 2 ஏக்கரில் நாட்டு பூசணி நடவு செய்துள்ளேன். தற்போது நல்ல விளைச்சல் கிடைத்தது. ஆனால், போதிய விலை கிடைக்கவில்லை. ஒட்டன்சத்திரம் சந்தையில் கிலோ ரூ.3-க்கு விற்பனை செய்யப்படுகிறது. போதிய விலை கிடைக்கவில்லை என்றாலும், அவற்றைப் பறித்து கொண்டு சந்தைக்குக் கொண்டு சென்றால், வியாபாரிகள் வாங்க யாரும் முன்வருவதில்லை. இதனால், பூசணிக்காயை செடியிலேயே விட்டு விடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT