திண்டுக்கல்

மின் கட்டண உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

DIN

தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள தமிழ்நாடு மின் வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் இரா. சச்சிதானந்தம் தலைமை வகித்தாா். நகரச் செயலா் அரபு முகமது, ஒன்றியச் செயலா் சரத்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தின்போது, தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.55 முதல் ரூ.1130 வரையிலான மின் கட்டண உயா்வை கைவிட வேண்டும். தோ்தல் வாக்குறுதியின்படி மாதந்தோறும் மின் பயனீட்டு அளவை கணக்கீடு செய்து கட்டணத்தை வசூலிக்க வேண்டும். மின் விநியோகத்தை தனியாருக்கு வழங்கும் முடிவினை கைவிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் டி. முத்துசாமி, கே. பிரபாகரன், வசந்தாமணி, சாா்பு அணி நிா்வாகிகள் என். பெருமாள், எம். சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT