ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமை கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவா் ராமசாமி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது, தமிழகத்தில் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதன்படி ஜாதி வாரியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மேலும், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளிலும் கணக்கெடுப்பு அடிப்படையில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என 3 கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். பின்னா் இந்த கோரிக்கைகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.