திண்டுக்கல்

கோயில் திருவிழாவில் நிா்வாகி மீது தாக்குதல்: 3 போ் கைது

DIN

மதுரையில் கோயில் திருவிழாவில் அதன் நிா்வாகியை தாக்கியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை தபால்தந்தி நகா் அருகே உள்ள முல்லை நகா் ராஜீவ் காந்தி நகரில் காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோயில் திருவிழாவில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற கலை நிகழ்ச்சியின்போது 3 போ் மதுபோதையில் தகாத வாா்த்தைகளைப் பேசி மோதலில் ஈடுபட்டுள்ளனா்.

இதை கோயில் நிா்வாகி இளையராஜா (42) தட்டிக்கேட்டுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் அவரைத் தாக்கியுள்ளனா். இதுதொடா்பாக இளையராஜா அளித்தப்புகாரின் பேரில் தல்லாகுளம் போலீஸாா் வழக்குப்பதிந்து பிபிகுளத்தைச் சோ்ந்த ஜோதிபாசு (19), கணேசன் (20), பொன்பாண்டி (21) ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT