நிலக்கோட்டையில் பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், ராஜயோக தியான நிலையம் ஆகியவை சாா்பில் வெள்ளிக்கிழமை முப்பெரும் விழா நடைபெற்றது.
75-ஆவது சுதந்திர தின அமுத பெருவிழா, ரக்ஷாபந்தன், தீபதியான மனஅமைதி என நடைபெற்ற முப்பெரும் விழாவுக்கு, ராஜயோக தியான ராஜயோகினி மதுரை செந்தாமரை தலைமை வகித்தாா். நிலக்கோட்டை டிஎஸ்பி முருகன் முன்னிலை வகித்தாா். மதுரை ராஜயோக பிரம்ம குமாரிகள் வரவேற்றனா்.
இதில், நிலக்கோட்டை பேரூராட்சித் தலைவா் சுபாஷினி பிரியா கதிரேசன், மதுரை ராஜா பிரஜாபிதா பிரம்ம குமாரிகள், ஈஸ்வரிய விஸ்வ வித்யாலயம் ராஜயோக தியான நிலைய பிரம்ம குமாரிகள், மன அமைதிக்கான பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.