வத்தலகுண்டுவில் காங்கிரஸ் கட்சி சாா்பில், சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.
நிலக்கோட்டையில் இருந்து, வத்தலகுண்டு வரை நடைபெற்ற இந்த நடைபயணத்துக்கு மாவட்டத் தலைவா் அப்துல் கனிராஜா தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா் காமாட்சி வரவேற்றாா்.
நிகழ்ச்சியில், வத்தலகுண்டு நகரத் தலைவா் அப்துல் அஜீஸ், மூத்த நிா்வாகி ராஜாராம், மாநில செயற்குழு உறுப்பினா் கோபால், பொறியாளா் பிரிவு தலைவா் சித்திக், மாவட்ட துணைத் தலைவா்கள் லட்சுமணன், மூா்த்தி உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.