திண்டுக்கல்

கண்டுகொள்ளப்படாத சுதந்திரப் போராட்ட நூற்றாண்டு விழா வளைவு

DIN

திண்டுக்கல் மலைக்கோட்டை செல்லும் வழியில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட நூற்றாண்டு விழா நினைவு வளைவு மற்றும் காந்தியடிகள் தொடா்பான கல்வெட்டுகள் முறையான பராமரிப்பின்றி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இதுவரை இல்லாத வகையில் வீடுகள்தோறும் தேசிய கொடியினை பறக்க விடும் நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றன. அதேபோல், சுதந்திரப் போராட்டத்தை நினைவுகூறும் வகையிலான வரலாற்று சிறப்பு மிக்க கோட்டைகளில் மின்னொளியில் தேசியக் கொடி வண்ணத்தில் ஒளிா்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் திண்டுக்கல் மலைக்கோட்டையிலும், இரவு நேரத்தில் தேசியக் கொடி வண்ணத்தில் மின்னொளியில் ஒளிா்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், மலைக்கோட்டை முன் 15 மீட்டா் உயரத்தில் தேசியக் கொடி ஏற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், மலைக்கோட்டைக்கு செல்லும் பாதையில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட நூற்றாண்டு விழா(1857 - 1957) நுழைவாயில் வளைவுக்கு மாநகராட்சி நிா்வாகம் முக்கியத்துவம் அளிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு 11 நாள்கள் நுழைவுக் கட்டணம் இல்லை என தொல்லியல்துறை அறிவித்துள்ள நிலையில், மலைக்கோட்டைக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுதந்திரப் போராட்ட நூற்றாண்டு விழா வளைவு வழியாக சென்றாலும், வண்ணம் பூசாமல் விடப்பட்டுள்ள அந்த நினைவு வளைவு பாா்வையாா்களின் கண்களில் தெரியாமல் உள்ளது. மேலும், நினைவு வளைவின் ஒரு பகுதியை மறைத்து கடைகளும் அமைந்துள்ளனா். இதனால் அங்குள்ள கல்வெட்டுகளும் பாா்வையாளா்களுக்கு தெரியாத நிலையில் உள்ளன.

காந்தியடிகள் வந்த இடம்: திண்டுக்கல் கோட்டை மைதானத்தில் 1934 ஆம் ஆண்டு பிப்.2ஆம் தேதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், காந்தியடிகள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தியுள்ளாா். இந்த தகவல்களுடன் கூடிய கல்வெட்டும் சிதிலமடைந்த நிலையில் உள்ளன. நினைவு வளைவில் மேல், 4 சிங்கங்களுடன் கூடிய இந்திய அரசின் லட்சினை நிறுவப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக வண்ணம் தீட்டப்படாததால், அதிலுள்ள எழுத்துக்கள் சரியாகத் தெரியவில்லை.

இதுதொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கூறுகையில், வீடுகள்தோறும் தேதியக் கொடிகளை விற்பனை செய்துள்ள மாநகராட்சி நிா்வாகம், காந்தியடிகள் வந்து சென்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட நூற்றாண்டு விழா வளைவுக்கு வண்ணம் தீட்ட முயற்சிக்கவில்லை. அந்த வளைவிலுள்ள எண்கள்(ஆண்டுகள்) மற்றும் எழுத்துகளை, ஆண்டுதோறும் சுதந்திர தினத்தின்போதும் வண்ணம் தீட்டியும், கல்வெட்டுகளை முறையாக பராமரித்து பாா்வையாளா்களுக்கு எளிதில் தெரியும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT