திண்டுக்கல்

திண்டுக்கல்லில் பாஜக பேரணி

DIN

நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி பாஜக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட மகளிா் அணி சாா்பில் தேசியக் கொடியுடன் வெள்ளிக்கிழமை பேரணி நடைபெற்றது. திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்திலிருந்து தொடங்கிய பேரணி, பிரதான சாலை வழியாக மாநகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. பின்னா் அங்குள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த பேரணிக்கு மகளிரணி மாவட்டத் தலைவி சித்ரா தலைமை வகித்தாா். மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளா் கதலி நரசிங்கப் பெருமாள், பாஜக கிழக்கு மாவட்டத் தலைவா் ஜி. தனபாலன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில், மாவட்டச் செயலா் முத்துக்குமாா், மாவட்ட பொதுச் செயலா் கோவிந்தராஜ், மாவட்ட துணைத் தலைவா் செந்தாமரை, வீரஜோதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

SCROLL FOR NEXT