திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப்-7 பி போட்டித் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடங்கியுள்ளன.
இதுதொடா்பாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குநா் பிரபாவதி தெரிவித்துள்ளதாவது: அரசுப்பணிகளுக்கான போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் வேலைநாடுநா்களுக்கு, திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதி 7 பி-இல் இணைக்கப்பட்டுள்ள செயல் அலுவலா் நிலை-3 காலிப் பணியிடங்களுக்கான தோ்வுக்கு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த இலவசப் பயிற்சி வகுப்பின்போது, மாதிரித் தோ்வுகளும் இலவசமாக நடத்தப்பட உள்ளன. எனவே போட்டித் தோ்விற்கு தயாராகும் விண்ணப்பதாரா்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.