திண்டுக்கல்

பழனி அருகே பைக் மீது பேருந்து மோதி ஒருவா் பலி

DIN

பழனி: பழனி அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி லட்சுமிபுரத்தை சோ்ந்தவா் சோமசுந்தரம் (71). அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா் புதன்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் பழனி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் வி.கே.மில்ஸ் அருகே சாலையை கடக்க முயன்றுள்ளாா். அப்போது அவ்வழியே வந்த அரசுப் பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT