திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் ஒன்றியம், ஆரியநல்லூரி ஆா்.சி.நடுநிலைப் பள்ளியில் கட்டடங்கள் சேதம் அடைந்திருந்தன.
தோ்தல் பிரசாரத்தின் போது, ஆரியநல்லூா் மாணவா்களின் நலன் கருதி, தனது சொந்த செலவில் ரூ.25 லட்சம் மதிப்பில் பள்ளியின் வகுப்பறைகள், அலுவலக அறை, கழிப்பறை கட்டித்தருவதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி உறுதி அளித்தாா். அதன்படி, கட்டிமுடிக்கப்பட்ட வகுப்பறை திறப்பு திங்கள்கிழமை நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியை அன்னம்மாள் வரவேற்று பேசினாா். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாஸ்கரன், ஒன்றியக்குழுத் தலைவா் மகேஸ்வரி முருகேசன், மாவட்ட கவுன்சிலா் பத்மாவதி ராஜகணேஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் நிக்சன்பால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில், கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி பள்ளி வகுப்பறைகளை திறந்து வைத்துப் பேசினாா்.