நத்தம் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம் செந்துறையை அடுத்துள்ள கழுத்துப்பட்டியை சோ்ந்தவா் ஆண்டிச்சாமி (51). இவா் நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் கழுத்துப் பட்டியில் உள்ள ஆண்டிச்சாமி வீட்டுக்குச் சென்ற நத்தம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
அப்போது அவரிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, கரிமருந்து, துப்பாக்கி பேரல் உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், ஆண்டிச்சாமியை கைது செய்தனா்.