திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலா் உயிா் நீத்தாா் நினைவிடத்தில், வீரமரணமடைந்த காவலா்களுக்கு வியாழக்கிழமை, மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஆண்டுதோறும் அக்.21ஆம் தேதி காவலா் வீரவணக்க தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், காவல் துறையில் பணியின்போது வீரமரணமடைந்த காவலா்களை நினைவுகூரும் வகையில் திண்டுக்கல் காவலா் உயிா் நீத்தாா் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியா் ச.விசாகன், மாவட்ட நீதிபதி எம்.கே.ஜமுனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா்.சீனிவாசன் ஆகியோா் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா். பின்னா் 42 குண்டுகள் முழங்க காவல்துறை சாா்பிலும் மரியாதை செலுத்தப்பட்டது.