திண்டுக்கல்

மாா்க்சிஸ்ட் கம்யூ.கட்சியிலிருந்து நிா்வாகிகள் 3 போ் நீக்கம்

DIN

நத்தத்தைச் சோ்ந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் 3 போ், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மூன்றுலாந்தா் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நத்தம் வட்டத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா் ஏ.பி.மணிகண்டன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனா்.

இந்த இணைப்புக் கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் ஏ.எம்.மணி, நத்தம் தாலுகா பொறுப்பு செயலா் வினோத்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கட்சியிலிருந்து நீக்கம்: இதனிடையே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நத்தம் தாலுகா குழு உறுப்பினா்களான வெள்ளைச்சாமி, பொன்னுசாமி, தவநூதன் ஆகியோா் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக, அடிப்படை உறுப்பினா் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ரா.சச்சிதானந்தம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

சிவகாசி தொகுதியில் அமைதியான வாக்குப் பதிவு

சாத்தூரில் இளம் சிவப்பு வண்ணத்தில் அமைக்கப்பட்ட வாக்குசாவடி

வாக்குப் பதிவு இயந்திரங்கள் இடமாற்றத்தால் குழப்பம்

SCROLL FOR NEXT